Friday, April 16, 2010

விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி!

இது பற்றிய மேல்விவரம்

http://ta.wikipedia.org/wiki/Wp:contest

என்ற வலைத்தளத்தில் இருக்கிறது. எல்லா வலைப்பதிவர்களும் தங்களுக்குத் தெரிந்த மாணவர்களை இந்தப் போட்டியிற் கலந்து கொள்ளுமாறு தூண்ட வேண்டுகிறேன். உங்களுடைய வலைப்பதிவிலும் இது பற்றி எழுதுங்கள். தமிழக மாணவரிடையே பங்களிப்பு விரிவாக அமைய இந்தப் பரப்புரை பயன்படும். ஆக்க வேலைகளில் சேர்ந்திருப்போம்.

தமிழுக்குப் பயனுள்ளதொரு பங்களிப்பு.

தாக்கமும் ஆக்கமும்
இராம.கி. 

http://valavu.blogspot.com/2010/04/blog-post.html

நாளைக்கு உன் தாயுக்கும் இதே கதி தான் !

இந்தியாவிற்கு முறையான விசா பெற்று நேற்று இரவு உடல் நலக் குறைப்பாட்டோடு சென்னை விமான நிலையம் வந்த தலைவர் பிரபாகரின் தாயாருக்கு விமானநிலையத்தை விட்டு வெளிவர அனுமதி கிடைக்கவில்லை.அவர் அவர் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.

இதற்க்கு  ஒவ்வொரு தமிழனும் பொறுப்பு ஏற்கனும் !

அன்னை சோனியாவை தாயக ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு மானங்கெட்ட காங்கிரெஸ்    தமிழனும் பொறுப்பு ஏற்கனும் !

நாளைக்கு உன் தாயுக்கும் இதே கதி தான் !

Tuesday, October 27, 2009

யாதும் ஊரே யாவரும் கேளிர் !

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படுஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

இப்பாடல் புறநானூற்றில் தொகுக்கப் பட்டுள்ளது. இப்பாடலை எழுதியவர் கணியன் பூங்குன்றனார், சோதிடத்தில் வல்லவராதலால் 'கணியன்' என அழைக்கப் பெற்றார்.

ஊழ் என்பது ஒருவன் செய்யும் நன்மையும் தீமையும் மறுபிறவியிலும் தொடர்வதாகும். ஆதலால் நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை, அவை முற்பிறவிப்பலன். ஊழின் வழி வாழ்வும் அதன் வழி இறப்பும் உண்டாகின்றன. எனவே வாழ்வதற்காக மகிழ்ச்சியும், வாழ்வது துன்பத்துக்குள்ளாகும்போது அதை வெறுப்பதும் வேண்டியதன்று.

ஊழ் என்று இருப்பதும் அதன் விளைவும் நூல்களில் கூறப்பட்டுள்ளன. அந்நூல் அறிவுத் திறமுடையவரால் எழுதப்பட்டவையாகும். அவற்றைக் காட்சியளவையால் காண இயலாது.

பெரியவர்கள் நல்ல ஊழ் காரணமாக உயர்ந்து காட்சியளிக்கின்றனர். தீயூழ் காரணமாகச் சிலர் சிறியவர்களாக காட்சியளிக்கின்றனர். அவர்களை வியப்பதும், இகழ்வதும் தேவையற்றது.

நீர் ஓடும் திசையிலேயே தெப்பமும் ஓடும். எதிர்த்திசையில் செல்லாது. அதுபோல உயிர் வாழ்க்கையானது ஊழ்வினையின் வழியே செல்லும். அதற்கு மாறாக, எதிராக நடைபெற இயலாது.

ஊழின் காரணமாக இந்த ஊரில் இந்நாரின் மகனாகப் பிறந்த ஒருவர் வேறு ஒரு ஊரில், நாட்டில் வேறு ஒருவர் மகனாகப் பிறக்க வாய்ப்பு உள்ளது.

ஆகவே, எங்கட்கு எல்லா ஊர்களும் எம் ஊர்களாகும். எல்லாரும் உறவினரே ஆவர் என்கிறது இந்தப் பாடல்.

இந்தப் பாடல் வரிகளை சாதரன குடிமகன் முதல் முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வரை அனைவரும் பழந்தமிழர் அறிவுக் கூர்மைக்கும், தொலை நோக்குப் பார்வைக்கும் எடுத்துக்காட்டாக கூறுவதைப் பார்க்க முடிகிறது.

இந்தப் பாடலின் ஆங்கில மொழிமாற்றம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
- Tamil Poem in Purananuru, circa 500 B.C , from http://tamilnation.org/

இவ்வாறாக இருக்கிறது.
இதுபோல நிறைய இலக்கியச் சுவைகள் உள்ளன. அவை வரும் பதிவுகளில்.

Monday, September 21, 2009

வரம் கொடுக்கும் தேவதைகள் !

வரம் கொடுக்கும் தேவதைகள்
      வந்தபோது துங்கினேன்
வந்தபொது தூங்கிவிட்டு
     வாழ்க்கை யெல்லம் ஏங்கினேன்

அற்பர்களின்  சந்தையிலே
     அன்புமலர் விற்றவன்
 அன்புமலர் விற்றதற்கு
     துன்ப விலை பெற்றவன்

வஞ்சிமலர் ஊமையான
     மாளிகையின் அதிபதி
மாளிகையின் அதிபதிக்கு
    மனதிலில்லை  நிம்மதி

மண வாழ்க்கை மேடையில்  நான்
     மா  பெரிய காவியம்
மா  பெரிய காவியத்தின்
   மனம் சிதைந்த ஓவியம் !

இது மு. மேத்தா எழுதிய கவிதை. இதை எனது தந்தை தனது 1983 வருட நாட்க்குறிப்பேட்டில் குறித்து வைத்து இருந்தார். இதைப் படித்த  போது எனது நினைவுகள் பின் நோக்கிச் சென்றன.........

அரசு உயர் நிலைப் பள்ளி, 12ம் வகுப்பு, எனது தந்நை இயற்பியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அது சார்பியல் பற்றி இருக்கலாம், சரியாக நினைவில்லை. அன்று அந்த மாணவர்கள் கூட்டத்தில் நானும் ஒருவன்.

ஒரு  மாணவன் பாடத்தைக் கவனிக்காமல் உறங்கி விட்டான். அவனை எழுப்பி, எனது தந்தை

'வரம் கொடுக்கும் தேவதைகள்
     வந்தபோது துங்கினேன்
வந்தபொது தூங்கிவிட்டு
    வாழ்க்கை யெல்லம் ஏங்கினேன்''

என்ற பாடல் வரிகளைப் பாடினார்.

அந்த மாணவன், இன்று இதை நினைவில் வைத்து இருக்கிறானா என்பது தெரியாது, ஆனால் எப்பொழுதெல்லாம் வாய்ப்பை இழக்கிறேனோ, அப்பொழுதெல்லாம், இந்தக் கவிதையும், எனது தந்தையின் நினைவும் என் மனதில் வந்து நிற்கும்.

இன்றும் என் தந்தையின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
 
Freelance Jobs